“குடிக்க பணம் கொடு ,இல்லேன்னா உயிரை விடு” -தாயை அடித்து கொன்ற மகன்

 

“குடிக்க பணம் கொடு ,இல்லேன்னா உயிரை விடு” -தாயை அடித்து கொன்ற மகன்

தனக்கு குடிக்க பணம் கொடுக்க மறுத்த தன்னுடைய தாயை அவரின் மகன் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

“குடிக்க பணம் கொடு ,இல்லேன்னா உயிரை விடு” -தாயை அடித்து கொன்ற மகன்

உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டம் பாலி கிராமத்தில் ஒரு தாய் தன்னுடைய கணவன் இறந்ததும் தனியாகவே தன்னுடைய மூன்று பிள்ளைகளை வளர்த்து வந்தார் .இந்நிலையில் அவரின் ஒரு மகன் வினீத் என்பவர் சில மோசமான நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார் .அதனால் அவர் தினமும் குடித்து விட்டு வந்து பலரிடம் தகராறு செய்துள்ளதால் அவர் மீது பல கிரிமினல் வழக்குகள் உள்ளன .அவர் ஒரு கொள்ளை வழக்கில் கைதாகி ஏற்கனவே சிறைக்கு சென்று சமீபத்தில்தான் வெளியே வந்தார் .
மேலும் அவர் அடிக்கடி குடிக்க பணம் கேட்டு தன்னுடைய தாயாரிடம் தகராறு செய்துள்ளார் .அப்படித்தான் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இரவு தன்னுடைய தாயாரிடம் குடிக்க பணம் கேட்டார் .அப்போது அவரின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் பணம் தர மறுத்து அவரை திட்டியுள்ளார் .இதனால் அவர் அங்கிருந்த ஒரு இரும்பு தடியை எடுத்து அவருடைய தாயாரை கடுமையாக தாக்கியுள்ளார் .அப்போது அதை தடுக்க வந்த தன்னுடைய சகோதரியையும் அவர் கடுமையாக தாக்கியுள்ளார் .இதில் பலத்த காயமுற்ற இருவரையும் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்கள் .அதில் அவரின் தாயார் உயிரிழந்தார் .அவரின் சகோதரி சிகிச்சை பெற்று வருகிறார்
இந்த கொலை பற்றி கேள்விப்பட்ட போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து வந்து அந்த நபர் வினீத்தை கைது செய்ய அவரை தேடி வருகிறார்கள் .அவர் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளார்கள் .

“குடிக்க பணம் கொடு ,இல்லேன்னா உயிரை விடு” -தாயை அடித்து கொன்ற மகன்