விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு – மாஜி அமைச்சர் கோரிக்கை நிராகரிப்பு

 

விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு – மாஜி அமைச்சர் கோரிக்கை நிராகரிப்பு

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு – மாஜி அமைச்சர் கோரிக்கை நிராகரிப்பு

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகாரின் பேரில், பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அமைச்சர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு – மாஜி அமைச்சர் கோரிக்கை நிராகரிப்பு

இதையடுத்து நடிகை சாந்தினி தன்னிடம் பணம் பறிக்க முயன்ற தாகவும், அது முடியாமல் போனதால் தான் தன் மீது பொய் புகார் அளித்ததாகவும், அதனால் இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி மணிகண்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் , விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நடிகை சாந்தினி ஆகியோர் இந்த விவகாரத்தில் பதில் அளிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டிருக்கிறது.