‘நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட்’ : சென்னை வானிலை ஆய்வு மையம்

 

‘நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட்’ : சென்னை வானிலை ஆய்வு மையம்

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நல்ல மழையால் நீர் நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், பவானி சாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனையடுத்து நேற்று கோவை மற்றும் நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் படி நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

‘நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட்’ : சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் நீலகிரி மாவட்டத்துக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. அம்மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. தேனி, கோவை மாவட்டத்திலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரியில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.