திருச்சி- 6 ஆயிரம் பணத்தை திருப்பி கொடுக்காததால் ஆத்திரம்! குடல்சரிந்து சடலமாக கிடந்த மின்வாரிய ஊழியர்!

 

திருச்சி- 6 ஆயிரம் பணத்தை திருப்பி கொடுக்காததால் ஆத்திரம்! குடல்சரிந்து சடலமாக கிடந்த மின்வாரிய ஊழியர்!

வாங்கிய பணத்தை கொடுக்காததால் ஆத்திரமடைந்து மணப்பாறையில் மின்வாரிய ஊழியரை குத்திக் கொன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார். வெறும் 6 ஆயிரம் பணத்திற்காக நடந்த இந்த கொலை அதிர்ச்சியளிக்கிறது.
 
திருச்சி மாவட்டம், மணப்பாறை அண்ணா நகரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி( வயது 40). மின்வாரிய ஊழியரான இவர் இன்று காலை வடக்கு பாரதியார் பகுதியில் கத்திக்குத்து காயங்களுடன் குடல் சரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் மணப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

திருச்சி- 6 ஆயிரம் பணத்தை திருப்பி கொடுக்காததால் ஆத்திரம்! குடல்சரிந்து சடலமாக கிடந்த மின்வாரிய ஊழியர்!
பழனிச்சாமி

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் பழனிச்சாமியை வடக்கு பாரதியார் நகரைச் சேர்ந்த தொழிலாளியான நாகராஜ்( வயது 32 )என்பவர் தான் இருசக்கர வாகனத்தில் கடைசியாக அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து நாகராஜை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் பழனிச்சாமியை கத்தியால் குத்தி கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

திருச்சி- 6 ஆயிரம் பணத்தை திருப்பி கொடுக்காததால் ஆத்திரம்! குடல்சரிந்து சடலமாக கிடந்த மின்வாரிய ஊழியர்!
கொலையாளி நாகராஜ்

நாகராஜிடம் பழனிச்சாமி 6 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்ட நிலையில் அதுசம்மந்தமாக பலமுறை கேட்டும் கொடுக்காததால் ஆத்திரமடைந்த நாகராஜ் பழனிச்சாமியை அழைத்துச் சென்று கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து நாகராஜ் மீது மணப்பாறை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.