ரஜினியின் ஆன்மீக அரசியல் வெற்றிபெற பாராயண நிகழ்ச்சி – அர்ஜுன் சம்பத் அறிவிப்பு!

 

ரஜினியின் ஆன்மீக அரசியல் வெற்றிபெற பாராயண நிகழ்ச்சி – அர்ஜுன் சம்பத் அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்த்தின் ஆன்மீக அரசியல் வெற்றி பெற பாராயண நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

ரஜினியின் ஆன்மீக அரசியல் வெற்றிபெற பாராயண நிகழ்ச்சி – அர்ஜுன் சம்பத் அறிவிப்பு!

ஈரோட்டில் மறைந்த இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் உருவப்படத்துக்கு இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் ஆன்மீக தேசியத்துக்காக பாடுபட்டார், அதனால் அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என கூறினார்.

ரஜினியின் ஆன்மீக அரசியல் வெற்றிபெற பாராயண நிகழ்ச்சி – அர்ஜுன் சம்பத் அறிவிப்பு!

தொடர்ந்து கந்த சஷ்டி கவசம் சர்ச்சையில் சிக்கிய கறுப்பர் கூட்டம் சேனல் தற்போது, குருஜி என்ற பெயரில் செயல்பட்டு வருவதாகவும் இதனை பற்றி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருப்பதாகவும் குறிப்பிட்டார். அதே போல, ஒரு நாடு ஒரு ரேசன் திட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்பிய நிலையிலும் அதனை முறியடிக்கும் விதமாக தமிழக அரசு அதனை செயல்படுத்தி இருப்பதாகவும் அதிமுகவில் எந்த பிரச்னையும் இல்லை, திமுக தான் எல்லாத்தையும் தூண்டி விடுகிறது என்றும் கூறினார்.

ரஜினியின் ஆன்மீக அரசியல் வெற்றிபெற பாராயண நிகழ்ச்சி – அர்ஜுன் சம்பத் அறிவிப்பு!

மேலும், சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் அமைத்து வெற்றி பெற இந்து மக்கள் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றும் அவருக்காக சென்னிமலையில் கந்தசஷ்டி பாராயண நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது என்றும் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.