1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது எப்போது? – முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு!

 

1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது எப்போது? – முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு!

1 முதல் 8 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்.1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பிற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது பற்றி பள்ளிக் கல்வித்துறை பரிசீலனை செய்தது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்தும் கருத்துக் கேட்டது. சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். மற்ற சிலர் அனைத்து வகுப்புகளுக்கும் திறக்கலாம் என்று தெரிவித்துள்னர்.

1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது எப்போது? – முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு!

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அளித்த கருத்துக்களை தொகுத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். அதில், 6 முதல் 8 வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாம் என அதில் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிறது. அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளதாம். அந்த அறிக்கையின் அடிப்படையில், வரும் 30ம் தேதி நடைபெறவுள்ள ஊரடங்கு ஆலோசனையில் பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுக்கவுள்ளார்.