#BREAKING தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு !

 

#BREAKING தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு !

தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் தளர்வுகள் என்னென்ன என்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த மே 10 ஆம் தேதி முதல் முதல் 2 வாரங்களுக்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.

#BREAKING தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு !

இதை தொடர்ந்து கடந்த ஜூன் 7 ஆம் தேதி முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் காய்கறி, மளிகை கடைகள், சலூன்கள், அழகு நிலையங்கள் என அனைத்தும் செயல்பட அனுமதியளிக்கப்பட்டது. இந்த சூழலில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடையவுள்ளது. இதனால் நாளை முதல் கூடுதல் தளர்வுகளுடன் என்னென்ன கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

#BREAKING தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு !

இந்நிலையில் வருகிற ஜூன் 28 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.சென்னை உட்பட 22 மாவட்டங்களில் மளிகை, காய்கறி ,இறைச்சி கடைகள் இரவு 7 மணி வரை செயல்படலாம்.தொற்று குறையாத 11 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.