பிரதமர் மோடியை வரவேற்க பேனர் வைக்க அனுமதியுங்கள்! உயர்நீதிமன்றத்திடம் கெஞ்சும் அதிமுக அரசு! 

 

பிரதமர் மோடியை வரவேற்க பேனர் வைக்க அனுமதியுங்கள்! உயர்நீதிமன்றத்திடம் கெஞ்சும் அதிமுக அரசு! 

பிரதமர் மோடி, சீன அதிபரை வரவேற்று சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பேனர் வைக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.

பிரதமர் மோடி, சீன அதிபரை வரவேற்று சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பேனர் வைக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ளது. 

High Court

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஸி ஜின்பிங் ஆகியோர், மாமல்ல புரத்தில் அக்டோபர் 11 முதல் 13 வரை சந்தித்து பேசவுள்ளனர். அவர்களை வரவேற்று சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை  14 இடங்களில் பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய – மாநில அரசுகள் சார்பில் நகராட்சி நிர்வாக துறை ஆணையர் பாஸ்கரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் முறையீட்டை ஏற்று மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வரும் 3 ஆம் தேதி இதுகுறித்து விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளனர்.  விதிமீறல் பேனர் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எதிர் மனுதாரராக உள்ளவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளனர்.