பொருளாதாரத்தை மீட்க போர்க்கால நடவடிக்கை எடுக்க ரெடி”ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் அறிவிப்பு
Sep 17, 2020, 19:03 IST1600349583000
நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு திருப்ப எத்தகைய போர்க்கால நடவடிக்கைகயையும் எடுக்க ரிசர்வ் வங்கி தயாராக இருப்பதாக அதன் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இதனை தெரிவித்தார். தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொருளாதார மீட்பு நடவடிக்களைகளை மேற்கொள்ள முடியவில்லை என்று கூறிய அவர், தொற்று பரவல் காரணமாக நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு வரை சரிவு நிலை தொடரத்தான் செய்யும் என்று தெரிவித்தார்.
மேலும், தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு நிலை படிப்படியாகத் தான் மீளும் என கூறிய அவர், பொருளாதாரத்தை மீட்டெடுக்க எத்தகைய போர்க்கால நடவடிக்கைகளையும் எடுக்க ரிசர்வ் வங்கி தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எஸ். முத்துக்குமார்