“இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தயார்” : கருணாஸ் பேட்டி!

 

“இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தயார்” : கருணாஸ் பேட்டி!

சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிடம் 2 தொகுதிகளை கேட்கவுள்ளதாக எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.

“இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தயார்” : கருணாஸ் பேட்டி!

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அதில் வெற்றி பெற்ற எம்எல்ஏவானார். தற்போது வருகின்ற சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து, திருப்பூரில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் . அப்போது பேசிய அவர், சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்ய காலம் உள்ளது . பாமக 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்பது என்பது பிற சமூகத்தினரை வஞ்சிக்கும் செயல் என்றார். இதைத்தொடர்ந்து கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு 25% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தயார்” : கருணாஸ் பேட்டி!

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ கருணாஸ், “தேர்தலில் அதிமுகவிடம் இரண்டு தொகுதிகள் கேட்க உள்ளோம். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தயார். அரசியலைப் பொறுத்தவரை உண்மையில் நான் ஹீரோ, பல ஹீரோக்கள் அரசியலில் காமெடியனாக உள்ளனர் ” என்றார்.