வேளச்சேரி தொகுதியில் மறுவாக்குப்பதிவு- தேர்தல் ஆணையம் அதிரடி

 

வேளச்சேரி தொகுதியில் மறுவாக்குப்பதிவு- தேர்தல் ஆணையம் அதிரடி

வேளச்சேரி தொகுதி 92 நம்பர் வாக்குச் சாவடியில் ஏப்ரல் 17-ந் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேளச்சேரி தொகுதியில் மறுவாக்குப்பதிவு- தேர்தல் ஆணையம் அதிரடி

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவடைந்த அன்றைய தினமே வேளச்சேரியில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை பைக்கில் சிலர் திருடி சென்றனர். அவர்களை மடக்கிப்பிடித்த திமுகவினர், அவர்களை போலீசில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து வேளச்சேரியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டுமென காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஹசன் மவுலானா வலியுறுத்தினார். ஆனால் பைக்கில் எடுத்து செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், பழுதான விவி பேட் இயந்திரங்கள் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரிவித்தார்.

வேளச்சேரி தொகுதியில் மறுவாக்குப்பதிவு- தேர்தல் ஆணையம் அதிரடி

இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் தொகுதி 92 நம்பர் வாக்குச் சாவடியில் மட்டும் வருகின்ற 17 ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெறும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.