#IPL2021 :அடிமேல் அடி… விராட் கோலிக்கு நேர்ந்த கொடுமை!

 

#IPL2021 :அடிமேல் அடி… விராட் கோலிக்கு நேர்ந்த கொடுமை!

ஐபிஎல் தொடரின் 19வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இறுதியில் சென்னை அணி 191 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியில் கேப்டன் விராட் கோலி 8 ரன்களுடன் ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களை மட்டுமே எடுத்தது.

#IPL2021 :அடிமேல் அடி... விராட் கோலிக்கு நேர்ந்த கொடுமை!

இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நடத்தை விதிகளின் கீழ் அவரது அணிக்கு முதன்முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட காலக்கெடுவை விடக்கூடுதலாக பந்துவீச நேரம் எடுத்துக்கொண்டதால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.