“மத்திய அரசுக்கு யார் அடிமை அரசு?” – முதல்வரை விமர்சித்த முன்னாள் அமைச்சர் உதயகுமார்!

 

“மத்திய அரசுக்கு யார் அடிமை அரசு?” – முதல்வரை விமர்சித்த முன்னாள் அமைச்சர் உதயகுமார்!

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் கலந்தாய்வு கூட்டம் திருமங்கலம் அருகே உள்ள அம்மா கோவிலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் உதயகுமார், “அதிமுக அரசை அடிமை அரசு என ஸ்டாலின் விமர்சனம் செய்தார். ஆனால் காவிரி பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தை அதிமுக எம்பிக்கள் 21 நாட்கள் முடக்கினர். தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி காவிரி ஆணையத்தைப் பெற்றுத் தந்தோம்.

“மத்திய அரசுக்கு யார் அடிமை அரசு?” – முதல்வரை விமர்சித்த முன்னாள் அமைச்சர் உதயகுமார்!

ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் வரியை ஒப்பிட்டுப் பார்க்கும் போது பிஹாரை எடுத்துக்கொண்டால் ஒரு லிட்டருக்கு பெட்ரோல்க்கு 24.71 சதவீதமும், டீசலுக்கு 18.34 சதவீதமும், டில்லியில் பெட்ரோலுக்கு 27 சதவீதமும் டீசலுக்கு 17.24 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் பெட்ரோலுக்கு 32.16 சதவீதமும் டீசலுக்கு 24.08 சதவீதமும் விதிக்கப்படுகிறது. இதன் மூலம் பெட்ரோலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.27.75 டீசலுக்கு ரூ. 20.35 அரசுக்கு கிடைக்கிறது.

“மத்திய அரசுக்கு யார் அடிமை அரசு?” – முதல்வரை விமர்சித்த முன்னாள் அமைச்சர் உதயகுமார்!

திமுக தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்போம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, 75 நாட்களாகயும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல் டீசல் விலை குறைக்கும் அதிகாரத்தில் அரசு உள்ளது அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி பெட்ரோல் டீசல் விலையை அரசு குறைக்க வேண்டும். தடுப்பூசியில் வெள்ளை அறிக்கை வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார். தடுப்பூசியில் வெள்ளை அறிக்கை வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.