ஸ்டாலினுக்கு வயிற்று எரிச்சல் அதனால்தான் முதல்வரை வசைப்பாடுகிறார்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

 

ஸ்டாலினுக்கு வயிற்று எரிச்சல் அதனால்தான் முதல்வரை வசைப்பாடுகிறார்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களை வசைபாடி பேசும் அவதூறு பேச்சை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லையெனில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளாஅர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர, ஒன்றிய கழக அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பங்கேற்றார்.

ஸ்டாலினுக்கு வயிற்று எரிச்சல் அதனால்தான் முதல்வரை வசைப்பாடுகிறார்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

அப்போது பேசிய அவர், “எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து அவதூறு பேச்சுக்களை பேசி வருகிறார், தன்னுடைய இயலாமை, வயிற்று எரிச்சல் காரணமாக ஸ்டாலின், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களை வசைப்பாடி வருகிறார். காணொளி காட்சி வாயிலாக காட்டும் கண்ணாம்பூச்சி விளையாட்டுகளை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும், தமிழ்நாட்டு மக்கள் வருகிற சட்டமன்ற தேர்தலில் அதற்கு தகுந்த பாடத்தை தெரிவிப்பார்கள். அடுத்தாண்டு தீபாவளியன்று நமது அதிமுகவின் பொன்விழா ஆண்டு, ஐம்பதாவது பொன்விழா நடைபெறும்போது, எவ்வளவோ தியாகம் செய்தாவது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சியை உருவாக்கி காட்ட வேண்டும் என சூளுரை ஏற்போம்” எனக் கூறினார்.