ஏஜென்சியை வைத்து மக்களை பற்றி தெரிந்து கொள்ளும் ஸ்டாலின்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அதிரடி

 

ஏஜென்சியை வைத்து மக்களை பற்றி தெரிந்து கொள்ளும் ஸ்டாலின்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அதிரடி

நெல்லையில் நடைபெற்ற ஜெ. பேரவை உறுப்பினர் சேர்ப்பு கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “பொதுமக்களின் உணர்வுகளை அவர்களுடன் களத்தில் நின்று தெரிந்து கொள்வதுதான் தலைவனுக்கு அழகு. அப்போதுதான் நல்ல தலைவனாக இருக்க முடியும். அதை விட்டுவிட்டு ஏஜென்சி வைத்து மக்களை பற்றி தெரிந்து கொள்பவர் சரியான தலைவராக இருக்க முடியாது. காமராஜரோ எம்ஜிஆரோ ஏன் கருணாநிதி கூட ஏஜென்சி வைத்து மக்கள் உணர்வுகளை தெரிந்து கொள்ளவில்லை. 8 மாதத்தில் ஆட்சியை பிடிக்கலாம் என திமுக ஒரு கனவு கண்டு கொண்டிருக்கிறது, நீங்கள் செய்த நில அபகரிப்பு, குடும்ப ஆதிக்கத்தை நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் வலிமையை அதிமுக பெற்றுள்ளது.

ஏஜென்சியை வைத்து மக்களை பற்றி தெரிந்து கொள்ளும் ஸ்டாலின்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அதிரடி

நாட்டு மக்கள் உணர்வை தெரியமால் கைலாசா நாட்டை உருவாக்குவோம் என்பது போல் திமுக நினைத்து கொண்டிருக்கிறது. ஒரு டிவியை முதலீடாக வைத்து திமுக ஆட்சிக்கு வந்தது, மக்கள் முழு செல்வாக்கை பெற்று ஆட்சியில் இருக்கும் ஒரே கட்சி அதிமுக. அறிக்கைகள் மட்டுமே வைத்துக்கொண்டு அரசை விமர்சிக்கின்ற அறிக்கை நாயகனாக ஸ்டாலின் இருக்கிறார்” என தெரிவித்தார்.