அறிக்கை விடுவதைத் தவிர வேறு எதையும் ஸ்டாலின் செய்யவில்லை – ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

 

அறிக்கை விடுவதைத் தவிர வேறு எதையும் ஸ்டாலின் செய்யவில்லை – ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

தினமும் அறிக்கை விடுவதைத் தவிர தி.மு.க தலைவர் ஸ்டாலின் வேறு எதையும் செய்யவில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

அறிக்கை விடுவதைத் தவிர வேறு எதையும் ஸ்டாலின் செய்யவில்லை – ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டுதமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளில் கவனம் செலுத்தும்படி தமிழக அரசை வலியுறுத்தி வரும் ஸ்டாலினை முதல்வர், அமைச்சர்கள் வரிசையாக வறுத்தெடுத்து வருகின்றனர். களத்தில் இறங்கி போராடிக்கொண்டிருக்கிறோம், தி.மு.க அறிக்கை விடுவதைத் தவிர என்ன செய்தது. கொரோனாவைக் கட்டுப்படுத்த ஒரு ஆலோசனையாவது சொன்னதா என்று எல்லாம் கேட்டு வருகின்றனர்.

அறிக்கை விடுவதைத் தவிர வேறு எதையும் ஸ்டாலின் செய்யவில்லை – ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டுஇந்த நிலையில் ஐ.டி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஐ.டி நிறுவன அதிகாரிகளுடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துரையாடினார். ஐ.டி நிறுவனங்கள் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று உறுதியளித்தார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “அ.தி.மு.க களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. தி.மு.க வீட்டிலிருந்து அறிக்கை விடுகிறது. கொரோனாவை வைத்து தி.மு.க அரசியல் செய்கிறது. கொரோனா காலத்தில் மக்களுக்கு அறிக்கைவிடுவதைத் தவிர்த்து ஸ்டாலின் வேறு எந்த சேவையையும் செய்யவில்லை” என்றார்.