ராயுடு, பிராவோ இன்று களம் இறங்குவார்களா? பயிற்சியாளரின் பதில்

 

ராயுடு, பிராவோ இன்று களம் இறங்குவார்களா? பயிற்சியாளரின் பதில்

இன்றைய ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்ள போவது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை.

சென்னை இதுவரை மூன்று போட்டிகளில் ஆடியது. அதில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமேதான் வென்றது. அதுவும் பலம் வாய்ந்த மும்பை இண்டியன்ஸ் அணியோடு மோதிய ஆட்டத்தில்.

ராயுடு, பிராவோ இன்று களம் இறங்குவார்களா? பயிற்சியாளரின் பதில்

முதலில் ஆடிய மும்பை அணி 162 ரன்களை எடுத்திருந்தது. எளிதாக அடித்து சென்னை வென்று விடும் என்று நினைத்தார்கள். ஆனால், வாட்சன் 5, முரளி 1, ஜடேஜா 10 என அவுட்டாக நிலைத்து நின்று ஆடியவர் அம்பத்தி ராயுடுதான். 48 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்ட்ரிகளை விளாசி 71 ரன்கள் எடுத்தார். அந்த ரன்களே அன்றைய வெற்றிக்கு முக்கியக் காரணம்.

ராயுடு, பிராவோ இன்று களம் இறங்குவார்களா? பயிற்சியாளரின் பதில்

அன்றைய போட்டிக்குப் பிறகு காயத்தால் ராயுடு அடுத்த இரண்டு போட்டிகளிலும் ஆட வில்லை. பிராவோவும் காயத்தால் போட்டிகளில் ஆட வில்லை. அதற்கு பிறகு சென்னை மோதிய ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளோடு தோல்வியே கிடைத்தது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் ராயுடுவும் பிராவோவும் களம் இறங்குவார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

அந்தக் கேள்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர், பிளமிங் பதில் சொல்லுகையில், ‘அணியின் வீரர்கள் காயத்திலிருந்து மீண்டு வந்துவிட்டார்கள். இன்றைய போட்டியில் நிச்சயம் ஆடுவார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

ராயுடு, பிராவோ இன்று களம் இறங்குவார்களா? பயிற்சியாளரின் பதில்

ராயுடுவும் பிராவோவும் நிச்சயம் ஒரு போட்டியின் முடிவை மாற்றி அமைப்பதில் வல்லவர்கள். அதுவும் பிராவோ சூப்பரான மேட்ச் ஃபினிஷர். பவுலிங்கிலும் வித்தை காட்டுபவர்.

சென்னை அணி மிடில் ஆர்டரில் தடுமாறி வரும் நிலையில் இந்த இருவரின் வருகை அணிக்குக் கூடுதல் பலமே!