ஹெலிகாப்டர் விபத்திலிருந்து நூலிழையில் உயிர் தப்பிய மத்திய அமைச்சர்!

 

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து நூலிழையில் உயிர் தப்பிய மத்திய அமைச்சர்!

பீகார் சட்டமன்ற பொதுத்தேர்தல் நெருங்கிவருவதையடுத்து அங்கு பாஜக தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர். இன்று மதுபானி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் ரவிசங்கர் பிரசாத் பங்கேற்பதாக இருந்தார். ஆனால் செல்லும் வழியில் சிறு தடங்கள் ஏற்பட்டது. அதற்கு அமைச்சர் செல்லவிருந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியானது.

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து நூலிழையில் உயிர் தப்பிய மத்திய அமைச்சர்!

இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் அலுவலகம், “மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் வதந்தி, அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நலமுடன் இருக்கிறார். அமைச்சர் பயணித்த ஹெலிகாப்டரின் ரோட்டார் பிளேடு பாதிக்கப்பட்டிருந்தது. இதை விமான நிலையத்திலேயே அதிகாரிகள் கண்டறிந்து சரிசெய்துவிட்டனர். அவர் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறார்” என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ரவிசங்கர் பிரசாத், “தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல ஹெலிகாப்டரில் ஏறியபின்னர் அதன் ரோட்டார் பிளேடு பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. நான் நலமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.