‘2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட’ தலைமைக் காவலர் மரணம்!

 

‘2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட’ தலைமைக் காவலர் மரணம்!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், முன்களப் பணியாளர்கள் பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர். போலீசார், செவிலியர்கள், மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் என பலருக்கு பாதிப்பு உறுதியாகிறது. அவர்களுள் சிலர் உயிரிழக்கவும் நேரிடுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியர் ஒருவர் இன்று காலை உயிரிழந்தார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாமுண்டேஸ்வரி என்னும் செவிலியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டும் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட’ தலைமைக் காவலர் மரணம்!

இந்த நிலையில், ராசிபுரம் அருகே உள்ள மங்களபுரம் தலைமை காவலர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லிமலை செம்மேடு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பாலசுப்பிரமணியன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மங்களபுரம் காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த தலைமை காவலர் பாலசுப்பிரமணியன் 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்தி கொண்டதாக தெரிகிறது.