கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் இன்சூரன்ஸ் – ராதாகிருஷ்ணன்

 

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் இன்சூரன்ஸ் – ராதாகிருஷ்ணன்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “சென்னையில் தொடர்ந்து காய்ச்சல் பரிசோதனை செய்வது அதிகரித்து வருகிறோம். கொரோனா வீரியம் எப்படி இருக்கும் என்பது மருத்துவ நிபுணர்கள் குழு தான் அரசிடம் கருத்துக்களை தெரிவிப்பார்கள். முக கவசம், கைகழுவுதல், இடைவெளி கடைபிடிப்பது அவசியம். தனியாரில் கொரோனா பரிசோதனை செய்தவர்களின் விவரம் அரசுக்கு தெரிவிக்கிறார்கள். சுகாதாரத்துறை, மாநகராட்சி, காவல்துறை என ஒருங்கிணைத்து இதை மேற்கொள்கிறோம்.

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் இன்சூரன்ஸ் – ராதாகிருஷ்ணன்

தனியார் மருத்துவமனைகளிலும் இன்சூரன்ஸ் பயன்படுத்த வேண்டும். இதை அரசு கண்காணித்து தான் வருகிறது எந்த மாவட்டத்தில் பாசிட்டிவ் கேஸ் அதிகமாக வருகிறது என்பதனை பார்த்து பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். பரிசோதனை செய்து கொள்வதில் மக்களும் தயாராக இருக்க வேண்டும். அதற்காக தான் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்துகிறோம். கொரோனாவை கட்டுப்படுத்த சித்த மருத்துவம் மூலமும் சிகிச்சை அளித்து வருகிறோம்.