“ஆ.ராசாவை அட்ரஸ் இல்லாமல் ஆக்குங்கள்” : அமைச்சரின் மகள் பரப்புரை!!

 

“ஆ.ராசாவை அட்ரஸ் இல்லாமல் ஆக்குங்கள்” : அமைச்சரின் மகள் பரப்புரை!!

ஸ்டாலினையும், ஆ. ராசாவையும் அட்ரஸ் இல்லாமல் செய்ய வேண்டும் என அமைச்சர் ஆர்பி.உதயகுமாரின் மகள் தெரிவித்துள்ளார்.

“ஆ.ராசாவை அட்ரஸ் இல்லாமல் ஆக்குங்கள்” : அமைச்சரின் மகள் பரப்புரை!!

திருமங்கலம் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை ஆதரித்து அவரது மகள் பிரியதர்ஷினி பிரச்சாரம் மேற்கொண்டார். கண்டு குளம் சாத்தங்குடி உள்ளிட்ட இடங்களில் பரப்புரை மேற்கொண்ட அவர் , “பெண்களை தெய்வமாக மதிக்கும் கட்சி அதிமுக. பெண்களை எப்போதும் இழிவாக பேசும் கட்சி திமுக. இந்த தேர்தலில் திமுகவை அடியோடு அழித்து நீங்கள் போடும் ஓட்டுகளால் அட்ரஸ் இல்லாமல் ஆக்க வேண்டும் .முதல்வர் தெய்வமாக மதிக்கிற அவரது அம்மாவை இழிவாக பேசிய ராசாவுக்கு நாம் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

“ஆ.ராசாவை அட்ரஸ் இல்லாமல் ஆக்குங்கள்” : அமைச்சரின் மகள் பரப்புரை!!

மீண்டும் எடப்பாடியாரை முதல்வராக அரியணையில் அமர வைக்க வேண்டும். ஆ.ராசா அவரது தலைவர் ஸ்டாலின் அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போக வேண்டும் . திமுகவை தலைமை ,தாங்கி நடத்தி வரும் ஸ்டாலினுக்கும் நீங்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். அது மட்டும் இல்லை நீங்கள் போடும் ஒவ்வொரு வாக்கும் பெண் சமுதாயத்தைப் பாதுகாக்கும் அரணாக இருக்கும். முதல்வரை ஆணவத்தின் உச்சகட்டமாக பேசிவரும் ஸ்டாலினுக்கும் ஆ. ராசாவுக்கும் நீங்கள் தகுந்த பாடம் புகட்டுவீர்கள் என்று நம்புகிறேன்” என்றார்