“பருவ பெண்ணை பஞ்சரான பஸ்சுக்குள் அடைத்து…” -ஒரு நாள் முழுவதும் குதறிய கூட்டம்

 

“பருவ பெண்ணை பஞ்சரான பஸ்சுக்குள் அடைத்து…” -ஒரு நாள் முழுவதும் குதறிய கூட்டம்


வீட்டிலிருந்து ஓடி வந்த பெண்ணை ஒரு கூட்டம் பஸ்சுக்குள் அடைத்து பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது .

“பருவ பெண்ணை பஞ்சரான பஸ்சுக்குள் அடைத்து…” -ஒரு நாள் முழுவதும் குதறிய கூட்டம்


கேரளாவின் கோழிக்கோட்டில் செவாயூரில் ஒரு 21 வயதான பெண் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார் .அந்த பெண் அடிக்கடி தன்னுடைய பெற்றோரோடு சண்டை போட்டு விட்டு வீட்டை போவதும் பின்னர் மீண்டும் கோபம் குறைந்ததும் வீட்டுக்கு வருவதுமாக இருந்தார் .இதனால் அவருக்கு மன நலம் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது .இந்நிலையில் அந்த பெண் கடந்த வாரம் இதேபோல் வீட்டில் கோபித்துக்கொண்டு ஒரு பைக்கில் வீட்டை விட்டு வெளியே வந்து ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தார் .
அப்போது அந்த பெண்ணை அதே பகுதியை சேர்ந்த கோபிஷ் மற்றும் முகமது ஷமீர் மற்றும் குன்னமங்கலம் பகுதியைச் சேர்ந்த இந்திரேஷ் என்ற மூவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை அவரிடம் ஆசையாக பேசி அவரை மயக்கினர் .பின்னர் அந்த மூவரும் அந்த பெண்ணை அங்கு ரிப்பேரில் நின்று கொண்டிருந்த ஒரு பேருந்தில் வைத்து கூட்டமாக பலாத்காரம் செய்து விட்டனர் .
பிறகு அவர்கள் அந்த பெண்ணை மறுநாள் ஒரு தனிமையான இடத்தில் விட்டு விட்டு ஓடி விட்டனர் .அதன் பிறகு அந்த பெண் அங்கிருந்து வீட்டிற்கு சென்று தன்னுடைய பெற்றோரிடம் தனக்கு நடந்த கொடுமையை பற்றி கூறினார் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அந்த மூவர் மீது போலீசில் பலாத்கார புகார் கொடுத்தனர் .போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு அந்த மூன்று போரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்