“துப்பாக்கியை காமித்து தூக்கிட்டு போய்ட்டான்” -தூங்கிய பெண்ணுக்கு நடந்த துயரம்

 

“துப்பாக்கியை காமித்து தூக்கிட்டு போய்ட்டான்” -தூங்கிய பெண்ணுக்கு நடந்த துயரம்


தன் வீட்டில் தூங்கிய பெண்ணை அவரின் பக்கத்து வீட்டு வாலிபர் துப்பாக்கி முனையில் மிரட்டி பலாத்காரம் செய்துவிட்டு ,மாடியிலிருந்து தூக்கி வீசிய கொடுமை நடந்துள்ளது .

“துப்பாக்கியை காமித்து தூக்கிட்டு போய்ட்டான்” -தூங்கிய பெண்ணுக்கு நடந்த துயரம்

உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் ஒரு 19 வயதான பெண் அங்கிருந்த ஒரு கல்லூரியில் படித்து வந்தார் .அவரின் பக்கத்து வீட்டில் அரவிந்த் சிங் என்ற 23 வயதான வாலிபர் வசித்து வந்தார் ,அந்த வாலிபருக்கு அந்த பெண் மீது ஆசை பிறந்துள்ளது .அதனால் அவர் அந்த பெண்ணை அடைய திட்டமிட்டார் .அதனால் அந்த பெண்ணிடம் தன்னுடைய ஆசையை தீர்த்துக்கொள்ள ஒரு மாபெரும் திட்டம் போட்டார் .அந்த திட்டப்படி அந்த பெண் அவரின் வீட்டில் கடந்த திங்கள் கிழமை இரவு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார் .
அப்போது அந்த அரவிந்த் சிங் தன்னுடைய தந்தையின் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அந்த பெண்ணின் வீட்டின் மாடி வழியாக அவரின் வீட்டிற்குள் நுழைந்தார் .அதன் பிறகு அவரின் படுக்கையறைக்குள் சென்று ஒளிந்து கொண்டார் .அப்போது அந்த பெண்னிடம் அந்த துப்பாக்கியை காமித்து உடனே தன்னோடு வருமாறும் , இல்லையென்றால் சுட்டு விடுவதாக மிரட்டினார் .அதை பார்த்து பயந்த அந்த பெண் அவரோடு அந்த வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றார் .
அப்போது அந்த வாலிபர் அர்விந்த் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார் .அதன் பிறகு அந்த பெண்ணை அந்த வீட்டின் மாடியிலிருந்து தூக்கி வீசினார் .அதன் பிறகு அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார் . பிறகு அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அவரின் தந்தை ஓடி வந்து அந்த பெண்ணை காப்பாற்றி அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார் .அங்கு அவரின் முதுகெலும்பு முறிந்துள்ளதால் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது .பிறகு போலீசார் அந்த அரவிந்த் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தார்கள் .

“துப்பாக்கியை காமித்து தூக்கிட்டு போய்ட்டான்” -தூங்கிய பெண்ணுக்கு நடந்த துயரம்