“கற்பழித்த இன்ஸ்பெக்டர் ,கருக்கலைப்பு செய்த டாக்டர்”-அரசு மருத்துவர் அதிரடி கைது..

 

“கற்பழித்த இன்ஸ்பெக்டர் ,கருக்கலைப்பு செய்த டாக்டர்”-அரசு மருத்துவர் அதிரடி கைது..

ஊரடங்கால் ஊருக்கு போக முடியாமல் பஸ் நிலையத்தில் தவித்த ஒரு சிறுமியை, ஒரு போலீஸ் அதிகாரி நான்கு மாதம் பலாத்காரம் செய்ததில் உண்டான கர்ப்பத்தை கலைத்த அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

“கற்பழித்த இன்ஸ்பெக்டர் ,கருக்கலைப்பு செய்த டாக்டர்”-அரசு மருத்துவர் அதிரடி கைது..

ஒடிஷா மாநிலம் பிரமித்ராபூர் பகுதியில் மார்ச் 25ம் தேதி ஒரு 14 வயது சிறுமி தனியாக ஒரு கண்காட்சியைக் காண வந்திருந்தார்.அன்று இரவே நாடு முழுவதும் கொரானாவால் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதால் ,அவர் ஊருக்கு போக முடியாமல் அலைந்த போது, அங்கு வந்த அந்த பகுதி இன்ஸ்பெக்டர் மாஜி என்பவர் அந்த பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று 4 மாத காலமாக கற்பழித்து வந்துள்ளார் .அதற்கு பிறகு அந்த பெண் கர்ப்பமான பிறகு அரசு மருத்துவர் டெபாசிஷ் கோஷ் என்பவர் ஜூன் 15ம் தேதி காவல் நிலையத்துக்கே வந்து அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்துள்ளார் .

“கற்பழித்த இன்ஸ்பெக்டர் ,கருக்கலைப்பு செய்த டாக்டர்”-அரசு மருத்துவர் அதிரடி கைது..
இந்நிலையில் அந்த அரசு மருத்துவர் கோஷ் மீது சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது .இதனால் செவ்வாய்க்கிழமை கோர்ட் போக்ஸோ சட்டத்தில் அவரையும் கைது செய்து சிறையிலடைத்தது .அவரின் ஜாமீனை ரத்து செய்தது .இந்த வழக்கு இப்போது ஒடிஷாவில் பரபரப்பினை உண்டு பண்ணியுள்ளது .