“காதல் நிலையமாக மாறிய காவல் நிலையம்”-பெண் போலீசை காதலித்து ஏமாற்றிய ஆண் போலீஸ் மீது பலாத்கார புகார்..

 

“காதல் நிலையமாக மாறிய காவல் நிலையம்”-பெண் போலீசை காதலித்து ஏமாற்றிய ஆண் போலீஸ் மீது பலாத்கார புகார்..

ஒரு போலிஸ் கான்ஸ்டபிள் தன்னோடு பணிபுரிந்த பெண் போலீசை காதலித்து ஏமாற்றிவிட்டு, வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்ததால் அவர் மீது ஏமாந்த பெண் போலீஸ் பலாத்கார புகாரளித்துள்ளார்..

“காதல் நிலையமாக மாறிய காவல் நிலையம்”-பெண் போலீசை காதலித்து ஏமாற்றிய ஆண் போலீஸ் மீது பலாத்கார புகார்..மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள வேல்தூரில் உள்ள போக்குவரத்து போலீஸ் கிளையில் பணிபுரியும் 30 வயதான ஒரு போலீஸ் கான்ஸ்டபிளுக்கும் அதே ஸ்டேஷனில் பணிபுரியும் ஒரு பெண் போலீசுக்கும் இடையே கடந்த ஐந்து ஆண்டுகளாக காதல் இருந்துள்ளது .இருவரும் பணியிலிருக்கும்போதே அந்த காவல்நிலையத்திலேயே காதல் புரிந்துள்ளனர் .இது அந்த காவல்நிலையத்தில் பணிபுரியும் அனைவருக்கும் தெரியும் .

“காதல் நிலையமாக மாறிய காவல் நிலையம்”-பெண் போலீசை காதலித்து ஏமாற்றிய ஆண் போலீஸ் மீது பலாத்கார புகார்..அந்த பெண் போலீசை அவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை உடலுறவு கொண்டுள்ளார் .இதனால் அவரின் பேச்சை நம்பி அந்த பெண் போலீசும் பலமுறை அவரின் ஆசைக்கு இணங்கியுள்ளார் .
இதற்கிடையே போலீஸ் கான்ஸ்டபிளுக்கு வேறு ஒரு இடத்தில பெண் பார்த்து நிச்சயிக்கப்பட்டது .இதனால் அதிர்ச்சியடைந்த அவர் காதலித்த பெண் போலீஸ் ,அவரிடம் இது பற்றி கேட்டு பலமுறை சண்டையிட்டுள்ளார் .ஆனால் அவர் பல சாக்குபோக்கு சொல்லி சமாளித்துள்ளார் .அப்போதெல்லாம் அந்த பெண் போலீஸ் என்னை விட்டுட்டு இன்னொரு பெண்ணோடு எப்படி திருமணம் செய்து நீ வாழ்வாய் என்று பார்க்கிறேன் என சவால் விட்டுள்ளார் .

“காதல் நிலையமாக மாறிய காவல் நிலையம்”-பெண் போலீசை காதலித்து ஏமாற்றிய ஆண் போலீஸ் மீது பலாத்கார புகார்..இதையெல்லாம் கண்டுகொள்ளாத அந்த கான்ஸ்டபிள் சமீபத்தில் அவருக்கு நிச்சயமான பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டார் .இதனால் கொதிப்படைந்த அந்த பெண் போலீஸ் தன்னை ஏமாற்றிய அந்த கான்ஸ்டபிள் மீது போலீசில் புகாரளித்தார் .அவரின் புகாரை பெற்ற மேலதிகாரிகள், ஒரு பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக கான்ஸ்டபிள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 376 (2) (என்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.