வீட்டை திறந்துவைத்து காற்றுவாங்கிக்கொண்டே தூங்கிய பெண்! உள்ளே புகுந்து வன்கொடுமை செய்த பலே ஆசாமி…

 

வீட்டை திறந்துவைத்து காற்றுவாங்கிக்கொண்டே தூங்கிய பெண்! உள்ளே புகுந்து வன்கொடுமை செய்த பலே ஆசாமி…

சென்னையில் வீடு புகுந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

அரும்பாக்கம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் 31 வயது பெண். இவரது வீட்டிற்கு அருகே முன்னதாக வாடகைக்கு குடியிருந்தவர் டிரைவர் முருகானந்தம் (49). இவர் தற்போது அமைந்தகரையில் உள்ள முரளிதரன் தெருவில் வசித்து வருகிறார். நேற்று அந்த பெண் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரின் குடும்ப திருமணம் அதே வீட்டில் நடைபெற்று உள்ளது. இந்த திருமண நிகழ்ச்சிக்கு முருகானந்தம் வந்தார்.அப்போது அந்த பெண் காற்றுக்காக தனது வீட்டு கதவை திறந்துவைத்து தூங்கினார்.

வீட்டை திறந்துவைத்து காற்றுவாங்கிக்கொண்டே தூங்கிய பெண்! உள்ளே புகுந்து வன்கொடுமை செய்த பலே ஆசாமி…

இதனையறிந்த முருகானந்தம், நிகழ்ச்சி முடிந்த பின்பு வீட்டிற்குள் நுழைந்து 31 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அந்த பெண் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் 448- அத்துமீறி வீட்டிற்குள் நுழைதல், 376- பாலியல் பலாத்காரம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனர்.