ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 122 பேருக்கு கொரோனா உறுதி!

 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 122 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,790 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,49,654 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,007 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் ஒரு லட்சத்து 19ஆயிரத்து 059பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 122 பேருக்கு கொரோனா உறுதி!

இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 122 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,618 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அங்கு 7,385 பேர் குணமடைந்துள்ள நிலையில் 99 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதங்களில் ராணிப்பேட்டையில் நாளொன்றுக்கு 200க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த பாதிப்பு குறைந்துள்ளது.