அமிதாப், அக்ஷய் பட சூட்டிங்கை நிறுத்த மாட்டோம்… பஞ்சாயத்தை முடிச்சு வைச்ச காங்கிரஸ்

 

அமிதாப், அக்ஷய் பட சூட்டிங்கை நிறுத்த மாட்டோம்… பஞ்சாயத்தை முடிச்சு வைச்ச காங்கிரஸ்

பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரின் படப்பிடிப்புகள் மற்றும் திரைப்படம் வெளியாவதை நிறுத்த மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்தியில் மன்மோகன் சிங் ஜியின் அரசாங்கம் இருந்தபோது நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது அமிதாப் பச்சன் அல்லது அக்ஷய் குமாராக இருந்தாலும் பெட்ரோல் விலை உயர்வு குறித்து டிவிட் செய்வது வழக்கம். தற்போது சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி. (கியாஸ்) விலையை உயர்த்தி வருகிறது. ஆனால் அவர்கள் இன்று இது குறித்து ஏன் பேசவில்லை?

அமிதாப், அக்ஷய் பட சூட்டிங்கை நிறுத்த மாட்டோம்… பஞ்சாயத்தை முடிச்சு வைச்ச காங்கிரஸ்
அமிதாப் பச்சன், அக்ஷய் குமார்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் ஜனநாயக ரீதியாக செயல்பட்டது. எனவே அவர்கள் அதை விமர்சிக்க முடியும். அவர்கள் மக்களுக்கும், நீதிக்கும் ஆதரவாக பேசவில்லை என்றால், மகாராஷ்டிரா காங்கிரஸ் அவர்களின் (அமிதாப் மற்றும் அக்ஷய்) படங்களை மாநிலத்தில் படமெடுக்க அனுமதிக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார். நானோ படோலின் இந்த பேச்சு அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அமிதாப் மற்றும் அக்ஷய் குமாருக்கு ஆதரவாக பா.ஜ.க. குரல் கொடுத்தது. இந்த சூழ்நிலையில், பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரின் படப்பிடிப்புகள் மற்றும் திரைப்படம் வெளியாவதை நிறுத்த மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி உறுதி அளித்துள்ளது.

அமிதாப், அக்ஷய் பட சூட்டிங்கை நிறுத்த மாட்டோம்… பஞ்சாயத்தை முடிச்சு வைச்ச காங்கிரஸ்
ரன்தீப் சிங் சுர்ஜேவாலா

காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா இது தொடர்பாக கூறியதாவது: பேச்சு சுதந்திரத்தை கட்சி மதிக்கிறது. ஆனால் 2 நடிகர்களின் குறித்து கட்சி கேள்வி எழுப்பும். பல பிரபலங்கள் இதே மாதிரி அரசுக்கு ஆதரவாக டிவிட் செய்து வருவதே கவலைக்கு காரணம். அமிதாப் அல்லது அக்ஷய் குமாரின் பட சூட்டிங்கை அல்லது பட வெளியிட்டை காங்கிரஸ் தொண்டர்கள் தடுக்க (நிறுத்த) மாட்டார்கள். பேச்சு சுதந்திரத்தில் காங்கிரஸ் நம்பிக்கை கொண்டுள்ளது. நானா படோலிடம் நான் பேசினேன். அது போன்ற நிகழ்வுகள் (பட சூட்டிங் அல்லது பட வெளியீட்டை நிறுத்துவது) நிகழாது என்று அவர் என்னிடம் உறுதி அளித்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனால் இந்த விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.