விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 59 மரக்கன்றுகளை நட்ட பிக்பாஸ் நடிகை

 

விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 59 மரக்கன்றுகளை நட்ட பிக்பாஸ் நடிகை

சர்வதேச பூமி தினத்தையொட்டியும், மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் பிக்பாஸ் நடிகை ரம்யா பாண்டியன் மரக்கன்றுகள் நட்டார்.

விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 59 மரக்கன்றுகளை நட்ட பிக்பாஸ் நடிகை

திருவள்ளூர் மாவட்ட காவல் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற மரம் நடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிக்பாஸ் பிரபலமான ரம்யா பாண்டியன், நிகழ்ச்சியில், மாவட்ட எஸ்பியுடன் சேர்ந்து ஆயுதப்படை காவலர்கள் மூலம் 59 மரக்கன்றுகளை நட்டனர்.

விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 59 மரக்கன்றுகளை நட்ட பிக்பாஸ் நடிகை

நிகழ்ச்சியில் பேசிய ரம்யா பாண்டியன், “சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம்வளர்ப்பு என அக்கறை காட்டிய விவேக் இதுவரை 33 லட்சத்துக்கும் மேல் மரக்கன்றுகளை நட்டுள்ளார். பூமி தினத்தையொட்டி இந்த ஆண்டு நடிகர் விவேக் நினைவாகவும் அவரது இயற்கை ஆர்வத்தை போற்றும் வகையிலும் 59 மரக்கன்றுகள் நடபட்டன. நடிகர் விவேக் மறையவில்லை. அவரது கலை சேவையிலும் இயற்கை ஆர்வத்திலும் அவர் என்றும் மறையாமல் புகழுடன் இருப்பார்” என தெரிவித்தார்