குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தசரா வாழ்த்து!
Oct 25, 2020, 10:19 IST1603601362000
தசரா பண்டிகையொட்டி குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், ‘நாடு முழுவதும் தசரா பண்டிகை வெவ்வேறு பரிமாணங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை நாட்டின் கலாச்சார ஒற்றுமையை வலுப்படுத்த உதவுகிறது. தீமையை புறக்கணித்து நற்பண்புகளை பின்பற்றி நல்லிணக்கத்துடன் வாழ ஊக்கம் அளிக்கிறது. இந்த திருநாளில் அனைத்து இந்திய மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
நாடுமுழுவதும் தசரா பண்டிகை இன்று கொண்டப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழா, குலசேகரப்பட்டினம் தசரா விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.