குடியரசு தலைவருக்கு நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி

 

குடியரசு தலைவருக்கு நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நெஞ்சுவலி காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நிலை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

குடியரசு தலைவருக்கு நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி

டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தை, பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உடல்நிலை குறித்து அவரின் மகனிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். அவர் விரைவாக குணமடையப் பிரார்த்திப்பதாகவும் மோடி தெரிவித்தார்.