ராமேஸ்வர மீனவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பு; இலங்கை கடற்படை அட்டூழியம்!

 

ராமேஸ்வர மீனவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பு; இலங்கை கடற்படை அட்டூழியம்!

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்துள்ளனர்.

ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். நேற்று அந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கே பலூன் விரைவு ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், துப்பாக்கியை காட்டி மீனவர்களை மிரட்டியுள்ளனர். உடனே கரை திரும்பவில்லை என்றால் துப்பாக்கிச் சூடு நடத்துவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

ராமேஸ்வர மீனவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பு; இலங்கை கடற்படை அட்டூழியம்!

இதனால் பயந்து போன மீனவர்கள், இன்று காலை கரை திரும்பியிருக்கின்றனர். இலங்கை கடற்படை மிரட்டலால் கரை திரும்பியதால் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இலங்கை கடற்படை அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்பதே மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.