இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி, டிச.21-ல் ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

 

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி, டிச.21-ல் ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரத்தில் வரும் 21ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 36 மீனவர்களையும், அவர்களது 5 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இதனை அடுத்து, கைதான மீனவர்களை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி, டிச.21-ல் ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில், ராமேஸ்வரம் துறைமுகத்தில் இன்று அனைத்து மீனவ சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளையும் விடுவிக்கவும், நிரந்தரமாக பாதுகாப்புடன் மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டது. மேலும், வரும் 21ஆம் தேதி அன்று ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. போராட்டத்திற்கு பின்பும் மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படாவிட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.