இலங்கை கடற்படை தாக்குதல் : 2 மீனவர்கள் மண்டை உடைந்தது !

 

இலங்கை கடற்படை தாக்குதல் : 2 மீனவர்கள் மண்டை உடைந்தது !

இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதில் 2 மீனவர்கள் மண்டை உடைந்தது படகுகள் சேதமஅடைந்ததால் கரை திரும்பியதாக ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

இலங்கை கடற்படை தாக்குதல் : 2 மீனவர்கள் மண்டை உடைந்தது !

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 2500க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுமார் 560 விசைப்படகுகளில் மீன் வளத் துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், கற்களை கொண்டு தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலின் போது இயேசு ராஜா மற்றும் தேவா என்ற இரண்டு மீனவர்களின் மண்டை உடைந்துள்ளது.

இலங்கை கடற்படை தாக்குதல் : 2 மீனவர்கள் மண்டை உடைந்தது !

இதை தொடர்ந்து மீனவர்கள் தாக்குதலுக்கு பயந்து உடனடியாக கரை திரும்பியுள்ளனர். இந்த தாக்குதலில் மீனவர்களின் படகுகள், வலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் உயிருக்கு பயந்து கரை திரும்பிய மீனவர்கள் தாங்கள் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.