ராமநாதபுரம்- சாலை விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழப்பு

 

ராமநாதபுரம்- சாலை விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழப்பு

ராமநாதபுரம்

பரமக்குடி அருகே நான்குவழிச் சாலையில் நேற்று இருசக்கர வாகனத்தின் மீது இனோவா கார் மோதிய விபத்தில் பெண் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பாம்புவிழுந்தான் கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜன்(65) மற்றும் பாண்டியம்மாள்(50) ஆகியோர் இருசக்கர

ராமநாதபுரம்- சாலை விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழப்பு

வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, பாம்புவிழுந்தான் அண்டக்குடி விலக்கு பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றபோது மதுரையில்
இருந்து வேகமாக வந்த இனோவா கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உடல்களை மீட்டு போலீசார் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.