“சசிகலா வருவது திமுகவிற்கு சாதகம் தான்”
10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாவிட்டாலும் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது என்று ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுக – திமுக கட்சிகள் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். மீண்டும் 3வது முறையாக ஆட்சியை தக்க வைத்து கொள்ள என்று அதிமுக முனைப்பு காட்டி வரும் நிலையில், இந்த முறையாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று திமுக தீவிரம் காட்டி வருகிறது.இதனிடையே சிறையில் இருந்த சசிகலா விடுதலையாகி இன்று தமிழகம் வந்து கொண்டிருக்கிறார். சசிகலா வருகைக்கு பிறகு அரசியல் களத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி செய்தியாளர்களை சந்தித்த போது, “தமிழகத்தில் சசிகலா வருகை அதிமுகவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் திமுகவுக்கு சசிகலாவின் வருகை சாதகமாக தான் உள்ளது. சசிகலா மீண்டும் தமிழக அரசியல் களத்திற்கு வருவது அதிக வெற்றி வாய்ப்பை திமுகவுக்கு பெற்றுத்தரும். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாவிட்டாலும் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது. ஸ்டாலின் சொல்லும் ஒவ்வொரு வாக்குறுதிகளையும் முதல்வர் பழனிசாமி நிறைவேற்றி வருகிறார். கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும் என ஸ்டாலின் முதல்வர் கல்வி கடனையும் ரத்து செய்து விடுவார் . அந்த அளவிற்கு அதிமுகவினர் பயத்தில் உள்ளனர்” என்றார்.