ராமநாதபுரம்- மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 5 பேர் கைது

 

ராமநாதபுரம்- மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 5 பேர் கைது

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திவந்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர். திருவாடானை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எஸ்.பி.பட்டினம் சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் இரண்டு மோட்டார்

ராமநாதபுரம்- மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 5 பேர் கைது

சைக்கிளில் வந்தவர்களை மறித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, சாக்குப்பையில் மறைத்து 2 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை கடத்திவந்த அதே பகுதியைச் சேர்ந்த சூரியபிரகாஷ்(22), சூர்யா(23), ஏழுமலை(22),முத்துராமலிங்கம்(40) மற்றும் பார்த்திபன்(26) ஆகியோரை கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கஞ்சா கடத்துவதற்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.