சென்னையில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பரிசோதனை செய்ய வேண்டும்! – ராமதாஸ் வலியுறுத்தல்

 

சென்னையில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பரிசோதனை செய்ய வேண்டும்! – ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னையில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டால் 15 நாளில் கொரோனாவைக் கட்டுப்படுத்தலாம் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னையில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பரிசோதனை செய்ய வேண்டும்! – ராமதாஸ் வலியுறுத்தல்இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்களில், “சென்னையில் ஒரு நாளைக்கு 20,000 சோதனைகள் செய்யப்பட்டால் கொரோனா பரவலை விரைவாக கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்று மருத்துவ வல்லுனர்களாக உள்ள எனது நண்பர்கள் கூறுகின்றனர். ஆனால், அதற்குரிய கட்டமைப்புகள் தமிழகத்தில் இல்லை என்று கூறப்படுகிறது!

http://


ஒரு நாளைக்கு 10000 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டால் அடுத்த 15 நாட்களில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும் என்பதும் வல்லுனர்கள் கருத்து. அது சாத்தியம் தான் என்பதால் சென்னையில் இப்போது 6000 ஆக உள்ள சோதனைகளை 10000 ஆக அதிகரிக்க வேண்டும்!” என்று கூறியுள்ளார்.