வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு- முன்னாள், இன்னாள் முதல்வர்களுக்கு நன்றி- ராமதாஸ்

 

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு- முன்னாள், இன்னாள் முதல்வர்களுக்கு நன்றி- ராமதாஸ்

நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி முதல் சிறப்பு ஒதுக்கீட்டை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து கல்வி சேர்க்கையிலும் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்ட வல்லுநர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே உறுதி அளித்திருந்த நிலையில், இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு- முன்னாள், இன்னாள் முதல்வர்களுக்கு நன்றி- ராமதாஸ்

இதற்கு நன்றி தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டை 26.02.2021 முதல் நடைமுறைப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று ஆணையிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. முதலமைச்சருக்கு உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தொழிற்கல்வி மாணவர் சேர்க்கை அறிவிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டாலும், அதிலும் 10.50% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது மனநிறைவளிக்கிறது.

பணி நியமனங்களிலும் இந்த ஒதுக்கீடு நடைமுறையாகி விட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10.50% நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதால் மிக மிக பின் தங்கிய நிலையில் உள்ள வன்னிய மக்களின் நிலைமை படிப்படியாக மேம்படும். வன்னியர்களின் கல்வி – வேலைவாய்ப்புகள் மேம்பட வழிவகுக்கும் இந்த சட்டத்தை இயற்றிக் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி , முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோருக்கும் நன்றிகள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.