மனநிறைவைத் தந்த தருமபுரி… டாக்டர் ராமதாஸ் வாழ்த்து

 

மனநிறைவைத் தந்த தருமபுரி… டாக்டர் ராமதாஸ் வாழ்த்து

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இருந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியது மனநிறைவைத் தந்தது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மனநிறைவைத் தந்த தருமபுரி… டாக்டர் ராமதாஸ் வாழ்த்து
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று (மே 21) வெளியிட்டுள்ள ட்வீட்களில், “தருமபுரி மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து திரும்பியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் கொரோனா இல்லாத மாவட்டமாக தருமபுரி உருவெடுத்திருப்பது மனநிறைவளிக்கிறது. இதே நிலையை தக்கவைக்க வாழ்த்துகள்!

சென்னை-புறநகர் பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது ஒருபுறமிருக்க மற்ற மாவட்டங்களில் வேகமாக கட்டுப்படுத்தப்பட்டு வருவது ஆறுதல் அளிக்கிறது. நேற்று தமிழகத்தின் 33 மாவட்டங்களில் 7 பேருக்கு மட்டும் தான் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பது நம்பிக்கையளிக்கும் செய்தியாகும்!

தமிழகத்தின் 26 மாவட்டங்களில் நேற்று புதிய கொரோனா தொற்றுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். இதே நிலை தொடர வேண்டும்; தமிழகம் கொரோனா இல்லாத மாநிலமாக மாற வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும் ஆகும். இதற்கான நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்!” என்று கூறியுள்ளார்.