காடுவெட்டி குருவுக்கு வீட்டிலேயே அஞ்சலி செலுத்திய ராமதாஸ், அன்புமணி!

 

காடுவெட்டி குருவுக்கு வீட்டிலேயே அஞ்சலி செலுத்திய ராமதாஸ், அன்புமணி!

காடுவெட்டி ஜெ.குருவின் இரண்டாம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி பா.ம.க நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தங்கள் வீடுகளில் அலங்கரித்து வைத்த குருவின் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.


இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட ட்வீடில், “மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் மாவீரன் குரு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட ட்வீடில், “மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் மாவீரன் குரு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் எனது இல்லத்தில் அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்” என்று கூறியுள்ளார்.