ராஜ்யசபாவுக்கு தேர்வான தமிழக எம்.பிக்கள் வரும் 22 ஆம் தேதி பதவியேற்பு!

 

ராஜ்யசபாவுக்கு தேர்வான தமிழக எம்.பிக்கள் வரும் 22 ஆம் தேதி பதவியேற்பு!

ராஜ்யசபாவுக்கு 37 புதிய எம்.பிக்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுள் தமிழகத்தை சேர்ந்த 6 எம்.பிக்களும் தேர்வாகினர். இவர்கள் அனைவரும் கடந்த ஏப்ரல் மாதமே பதவி ஏற்றிருக்க வேண்டிய நிலையில், கொரோனா பாதிப்பால் பதிவியேற்பு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது பாதிப்பு குறைவாக இருப்பதால் பதிவியேற்பை நடத்துவதில் ராஜ்யசபா தீவிரமாக உள்ளது.

ராஜ்யசபாவுக்கு தேர்வான தமிழக எம்.பிக்கள் வரும் 22 ஆம் தேதி பதவியேற்பு!

இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து மாநிலங்களைவைக்கு தேர்வான 6 எம்பிக்கள் வரும் 22 ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் தேர்வான மு.தம்பிதுரை, கே.பி முனுசாமி, ஜி.கே வாசன் ஆகியோரும் திமுக சார்பில் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரும் பதிவியேற்க உள்ளனர்.