’கண்ணீர் வழியுது’ ரஜினியின் அறிக்கையும் ரசிகர்களின் ரியாக்‌ஷனும்!

 

’கண்ணீர் வழியுது’ ரஜினியின் அறிக்கையும் ரசிகர்களின் ரியாக்‌ஷனும்!

ரஜினியிடம் நீண்டகாலமாக ஒரு கேள்வி அடிக்கடிக் கேட்கப்பட்டது….. ‘எப்போ அரசியலுக்கு வர போறீங்க?’ அதற்கான தீர்க்கமான பதிலை ரஜினி இன்று தெரிவித்துள்ளார்.

இன்று ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’கொரோனா காலத்தில் மக்களை சந்தித்து பிரச்சாரத்தின் போது என் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என் கூட வந்து என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும் சங்கடங்களையும் எதிர்கொண்டு மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும்.

’கண்ணீர் வழியுது’ ரஜினியின் அறிக்கையும் ரசிகர்களின் ரியாக்‌ஷனும்!

நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலு விதமாக என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என்கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவும் வாழ்த்தும் அதிர்ச்சியும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினியின் ட்விட்டர் பக்கத்தில் அந்த அறிக்கைக்கு கீழே அவரின் ரசிகர்கள் பல்வித மனநிலையில் கமெண்ட் செய்துள்ளனர்.

’கண்ணீர் வழியுது’ ரஜினியின் அறிக்கையும் ரசிகர்களின் ரியாக்‌ஷனும்!

சதீஷ் என்பவர், ’ஒவ்வொரு வார்த்தைகளை படிக்கும்போதும் கண்ணீர் துளிகள் என்னையும் மீறி வெளிவருது தலைவா. முழுக்கு முழுக்க மனசு நொறுஞ்சிபோயிருச்சு. அளவு கடந்த அன்பு இருக்கறதுனால, எனக்கு எப்பவும் உங்க உடல்நலம் தான் முக்கியம். உங்க உடல்நலத்தை பார்த்துக்கோங்க தலைவா..நீங்க 100 வருஷம் நல்லா இருக்கணும்’ என்று கமெண்ட் செய்துள்ளார்.

செளமியா எனும் ரசிகை, ‘நாங்க எல்லாம் நீங்க கட்சி ஆரம்பிப்பீங்கனு நெனைச்சு உங்க கூட இல்ல. No expectation what so ever. என்ன ஒன்னு, அரசியல் மாற்றம் வர இன்னும் பல வருஷம் ஆகும். அதுக்காக உங்கள பலிகடா ஆக்க விருப்பம் இல்லை தலைவா. Be safe. Love u alwayz’ என்று பதிவிட்டுள்ளார்.

அன்னபூரணி எனும் ரசிகை, ’தலைவா நீங்கள் ஒன்றும் கவலைபட வேண்டாம். நீங்க கட்சி ஆரம்பித்தாலும் ஆரம்பிக்கவில்லை என்றாலும் உங்கள் மீது வைத்துள்ள அன்பும் பற்றும் என்றும் மாறாது உங்கள் உடல்நலனே முக்கியம் எங்களுடன் நீங்கள் நீண்ட பயணம் தொடர வேண்டும் அதுவே எங்களுக்கு முக்கியம்’ என்று கூறியிருக்கிறார்.

ராஜேஷ் என்பவர், ‘அவரோட முடிவு கஷ்டமா இருந்தாலும் இதான் நல்ல முடிவு தலைவா… எல்லாரும் புருஞ்சிக்கோங்க’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ரியாஸ் என்பவர், ‘மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உங்கள் எண்ணம், 3 வருட உழைப்பு அனைத்தும் கொரோனாவால் வீணாகிறது

உங்கள் நல்ல எண்ணமும், அதை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன். எங்களுக்கு நீங்கள் தான் குரு, தெய்வம் எல்லாம்.. உயிருள்ள வரை தலைவர் தான்’ என்று தெரிவித்துள்ளார்.

இன்னும் பலரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர் அநாகரிகமாக கமெண்ட் செய்து வருவதையும் பார்க்க முடிகிறது. மொத்தத்தில் ரஜினி ரசிகர்களுக்கு அவர் கட்சி ஆரம்பிப்பதை விடவும் ஆரோக்கியமே முக்கியம் என்று சொல்கிறார்கள்.