“சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை ரஜினிகாந்த் வெளியில் வரமாட்டார்” – ஜோதிடர் ஷெல்வீ

 

“சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை ரஜினிகாந்த் வெளியில் வரமாட்டார்” – ஜோதிடர் ஷெல்வீ

நடிகர் ரஜினிகாந்த் 2021 சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை வெளியில் வரமாட்டார் என ஜோதிடர் ஷெல்வீ கூறியுள்ளார்.

“சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை ரஜினிகாந்த் வெளியில் வரமாட்டார்” – ஜோதிடர் ஷெல்வீ

நடிகர் ரஜினிகாந்த் 2017 ஆம் ஆண்டு சட்டபேரவை தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார். அதன் பிறகு 3 ஆண்டுகள் எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் படங்களில் நடித்து வந்த ரஜினி கடந்த மாதம் ஜனவரியில் கட்சி தொடங்குவதாக கூறினார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினி அறிவித்தது ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை பலராலும் இன்னும் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ரஜினியின் இந்த மாறுபட்ட முடிவுகள் குறித்து பலரும் பலவிதமாக கருத்து கூறி வருகிறார்கள்.

“சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை ரஜினிகாந்த் வெளியில் வரமாட்டார்” – ஜோதிடர் ஷெல்வீ

இந்நிலையில் இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு ஜோதிடர் ஷெல்வீ அளித்துள்ள பேட்டியில், 2017 ஆம் ஆண்டிலிருந்தே அவர் அரசியலுக்கு வருவார் என்று நான் அறிவித்தேன். நான் சொன்னபடி 2020 டிசம்பரில் கட்சி குறித்து ரஜினிகாந்த் அறிவித்தார். கட்சி பொறுப்பாளர்களை நியமித்து பணியை துவங்கினார். தற்போது சொல்கிறேன் ரஜினிகாந்த், உடல்நிலை காரணமாக தேர்தல் முடியும் வரை வெளியில் வர மாட்டார் . பிப்ரவரி 16 ஆம் தேதிக்குள் ரஜினியின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும் என ஏற்கனவே கூறியுள்ளேன். ரஜினியின் உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை ” என்று கூறியுள்ளார்.