தலைவி படம் பார்த்து ரஜினிகாந்த் சொன்னது என்ன?

 

தலைவி படம் பார்த்து ரஜினிகாந்த் சொன்னது என்ன?

ஜெயலலிதா தனக்கு பிடித்த நடிகை என்று ரஜினி மேடையில் சொன்னாலும்கூட, பல நேரங்களில் இருவரும் எதிரும் புதிருமாகத்தான் இருந்திருக்கிறார்கள். அதனால்தான் படையப்பா படம் அந்த அளவிற்கு பெரிய வெற்றியை பெற்றது. படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி கதாபாத்திரத்தை ஜெயலலிதாவைத்தான் எல்லாரும் கற்பனை செய்து பார்த்தார்கள். ஜெயலலிதாவும் ரஜினியும் எதிரும் புதிருமாக நின்று நடிப்பதை போலவே ரசிகர்கள் கற்பனை செய்து கொண்டார்கள். அதுவே படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது.

தலைவி படம் பார்த்து ரஜினிகாந்த் சொன்னது என்ன?

இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று இருக்கிறது. அதிமுகவினர் சிலர் இப்படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளுக்கு ஆட்சேபனை தெரிவித்து காட்சிகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

இந்தப்படத்தில் ரஜினியின் ஜெயலலிதாவும் எதிரும் புதிருமாக இருந்த காட்சிகளும், கருணாநிதியும் ஜெயலலிதாவும் எதிரும் புதிருமாக இருந்த காட்சிகளும் இடம்பெறவில்லை என்று ரசிகர்கள் குறைபட்டுக் கொள்கிறார்கள். ஆர்.எம்.வீரப்பனுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையேயான எதிரும் புதிரும் காட்சிகள்தான்படத்தில் அதிகம் இருக்கின்றன. ஆர்.எம். வீரப்பன் பாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரகனியின் கேரக்டரை மெச்சுகிறார்கள் ரசிகர்கள்.

நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த படம் திரையிட்டு காண்பிக்கப் பட்டிருக்கிறது. படத்தைப் பார்த்த ரஜினி, இயக்குனர் விஜய்க்கு போன் செய்து பாராட்டியிருக்கிறார். இப்படத்தினை உருவாக்கிய விதம் தன்னை கவர்ந்திருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.