அரசியலுக்கு எண்டு கார்டு… மீண்டும் ஷூட்டிங்கில் பிஸியான ரஜினிகாந்த்!

 

அரசியலுக்கு எண்டு கார்டு… மீண்டும் ஷூட்டிங்கில் பிஸியான ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் செய்யப்போவதாக பல ஆண்டுகளாக கூறி வந்தார். அவர் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்பது புரியாத புதிராகவே இருந்தது. இத்தகைய சூழலில், தான் புதிய கட்சி தொடங்கவிருப்பதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த். தனது கட்சிக்கான நிர்வாகிகளையும் நியமித்தார். தேர்தல் நெருக்கத்தில் அவர் கட்சித் தொடங்கப்போவதாக அறிவித்தது, அரசியல் களத்தில் உற்று நோக்கப்பட்டது.

அரசியலுக்கு எண்டு கார்டு… மீண்டும் ஷூட்டிங்கில் பிஸியான ரஜினிகாந்த்!

கட்சிக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்த ரஜினிகாந்த், தனது உடல்நிலையை காரணம் காட்டி திடீரென அரசியல் பிரவேச முடிவில் இருந்து பின்வாங்குவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் தலையில் பேரிடியாக விழுந்தது. அரசியலில் இருந்து ரஜினிகாந்த் பின்வாங்கினாலும், தேர்தலில் வாய்ஸ் கொடுப்பார் என அரசியல் வட்டாரங்கள் கூறி வந்தன. ஆனால், அந்த அறிவிப்புக்கு பிறகு ரஜினிகாந்த் மௌனம் சாதித்தார். எந்த கட்சிக்கும் ஆதரவாக வாய்ஸ் கொடுக்கவில்லை. வழக்கம் போல, நேற்று முன்தினம் தனது ஜனநாயக கடமையை மட்டும் சிறப்பாக செய்து விட்டுச் சென்றார்.

அரசியலுக்கு எண்டு கார்டு… மீண்டும் ஷூட்டிங்கில் பிஸியான ரஜினிகாந்த்!

அரசியல் பிரவேசத்துக்கு எண்டு கார்டு போட்ட ரஜினிகாந்த் மீண்டும் ஷூட்டிங்கில் தன்னை பிஸியாக்கிக் கொண்டுள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் ல் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த‘ திரைப்பட ஷூட்டிங்கிற்காக இன்று காலை சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு பறந்து சென்றார். கொரோனா பாதிப்பால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஜனவரி மாதம் தான் ஆரம்பித்தது. ஹைதராபாத்துக்கு சென்றிருக்கும் ரஜினிகாந்த், 3 வாரங்கள் ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.