எனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இவரே! ரஜினிகாந்த் அதிரடி
நடிகர் ரஜினிகாந்த் ஒருவழியாக அரசியல் கட்சி தொடங்க போவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். முதல்முறையாக தனது அரசியல் அறிவிப்பு குறித்து தெளிவான நிலைப்பாடு ஒன்றை ரஜினிகாந்த் எடுத்துள்ளார். டிசம்பர் 31ஆம் தேதி கட்சி அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிடுவேன் என ரஜினிகாந்த் கூறியதால், அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதுகுறித்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப்பெற்று தமிழகத்தில் நேர்மையான நாணயமான வெளிப்படையான உழலற்ற ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியலை உருவாக்குவது நிச்சயம். ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால், டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் திரு. தமிழருவி மணியன் அவர்கள் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
“இப்போ இல்லேன்னா எப்பவும் இல்லை”
“மாத்துவோம் எல்லாத்தையும் மாற்றுவோம்”” எனக் குறிப்பிட்டுள்ளார்.