கொரோனா பயம்: ஓட்டுநரை அனுமதிக்காமல் தானே காரை ஓட்டிச்செல்லும் சூப்பர் ஸ்டார்

 

கொரோனா பயம்: ஓட்டுநரை அனுமதிக்காமல் தானே காரை ஓட்டிச்செல்லும் சூப்பர் ஸ்டார்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல அரசியல் பிரமுகர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தி நடிகர்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பயம்: ஓட்டுநரை அனுமதிக்காமல் தானே காரை ஓட்டிச்செல்லும் சூப்பர் ஸ்டார்

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக நடிகர் ரஜினிகாந்த் தனது காரை செல்ப் ட்ரைவ் செஞ்சப்படி சென்னையிலுள்ள அவரின் கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு சென்றிருக்கிறார். கொரோனா பரவல் காரணமாக ஓட்டுநர்கள் யாரையும் அனுமதிக்காமல் காரை தானே இயக்கி செல்கிறார். ரஜினிகாந்த் நீண்ட வருடங்கள் கழித்து தனது காரை இயக்கியிருக்கிறார். முக கவசம் அணிந்து, சீட் பெல்ட் போட்டுக்கொண்டு ரஜினிகாந்த் காரை ஓட்டும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது