சென்னை வந்தார் ரஜினிகாந்த்!

 

சென்னை வந்தார் ரஜினிகாந்த்!

கடந்த 25ம் தேதி அன்று உடல் சோர்வினால் ரஜினிகாந்த் ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் சோர்வு அதிகமாக இருந்ததால், அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்தவர்களுக்கு நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ரஜினிக்கும் கொரொனா பரிசோதனை நடைபெற்றது. பரிசோதனையில் ரஜினிக்கு கொரோனா இல்லை என்பதும் , தொற்றுக்கான அறிகுறிகளும் இல்லை என்று தெரியவந்தது.

சென்னை வந்தார் ரஜினிகாந்த்!

இதையடுத்து உடல் சோர்வுக்கான பரிசோதனையில், ரஜினிக்கு ரத்தம் அழுத்தம் சீராக இல்லை என்பது தெரியவந்தது. அதனால் அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறுவுறுத்தினர். இரண்டு நாள் சிகிச்சைக்கு பிறகு அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை 5.30 மணியளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஒருவாரம் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்றும், மன அழுத்த இல்லாத வகையில் அவரை பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அப்பல்லோ அறிவுறுத்தியது.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன் ஐதராபாத்திலிருந்து சென்னை வந்த ரஜினிகாந்த் போயஸ்கார்டன் இல்லத்திற்கு சென்றார். அங்கு அவர் ஓய்வில் இருப்பார் என தெரிகிறது.