அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த் : ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு

 

அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த் :  ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு

மக்கள் நலப்பணிக்காக முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் என்பது பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் ஒலித்து கொண்டிருந்த ஒரு செய்தி. கடந்த 2017 ஆம் தேதி அரசியலுக்கு வரப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நடிகர் ரஜினி. சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என்று அறிவித்த ரஜினிகாந்த், கொரோனா மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு ரஜினி தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார். இந்த சூழலில் நடிகர் ரஜினி, ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்று சந்தித்து பேசினார்.

அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த் :  ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் , என்னை வாழவைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன நிலை என்ன ?என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது .அதை விளக்க வேண்டியது என்னுடைய கடமை.

அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த் :  ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு

நான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் ஆக மாற்றி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல உதவிகளையும், பல சாதனைகளையும் உருவாக்கினோம்.

அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த் :  ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு

காலச் சூழலால் நாம் எண்ணம் சாத்தியப்படவில்லை . வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப் போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு சார் பணிகள் எதுவும் இன்றி இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள். இணை. துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் .மக்கள் நலப் பணிக்காக முன்புபோல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க தமிழ் மக்கள்! வாழ்க தமிழ்நாடு! ஜெய்ஹிந்த் ” என்று குறிப்பிட்டுள்ளார்